Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏடிஎம்மில் திருட முயற்சி - திருடருக்கு வந்த சோதனை

ஜனவரி 10, 2021 12:43

தேனி : ஆண்டிபட்டி புறநகர் பகுதி ஏடிஎம்மில் திருட முயற்சி, இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. ஆண்டிபட்டி தேனி தேசிய நெடுஞ்சாலையில் புறநகர் பகுதியான  ஜக்கம்பட்டியில் பாரதஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத  இன்று  அதிகாலை இரண்டு மணி அளவில்  பாரத ஸ்டேட்வங்கி ஏடிஎம்மிற்குள் திருடுவதற்காக ஒரு மர்மநபர் உள்ளே நுழைந்தார்.

 அந்த  மர்மநபர் கைஉறை, முககவசம் மற்றும் தலையில் முகமூடி அணிந்து அடையாளம் தெரியாதபடி உள்ளே சென்று ஏடிஎம்மை உடைத்து  திருடமுயற்சி செய்தார்.
 ஆனால் எவ்வளவோ  முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை  உடைக்க முடியவில்லை. திருடும் முயற்சியில்  ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்தது.

 இந்நிலையில் ஏடிஎம்மிற்கு  வெளியே சாலையில் ஆள்நடமாட்டம் தொடங்கியதையடுத்து திருடும் முயற்சியை கைவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் ஏடிஎம்மில் இருந்த பணம்  தப்பியது. இந்நிலையில் இன்று ஏடிஎம்மிற்கு பணம் எடுப்பதற்காக வந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்து இருப்பதைப் பார்த்து ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 இதையடுத்து  ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபட்டியில் அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 
நடைபெற்ற திருட்டு  முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்